இலங்கை

எதிர்க்கட்சியில் இணைய மாட்டேன் – சுசில் பிரேமஜயந்த

கற்று தேர்ந்தவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுகிறதா எனும் சந்தேகம் எழுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“நான் அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அரசியலில் இருந்து விலகவில்லை. பகல் நேரங்களில் நான் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலை ஆகின்றேன்.

அமைச்சு பதவி ஒன்றை ஏற்று கொள்ளுமாறு எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. இப்போதைய நாடாளுமன்றில் நல்ல அறிவுடைய, கல்வி தகமை உடைய, நல்ல அனுபவம் உடைய நபர்களின் அறிவு, அனுபவம் என்பன இழிவுபடுத்தப்படுகிறதா எனும் சந்தேகம் எழுகிறது.

எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள போவதில்லை அவ்வாறு அழைப்புக்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button