கணக்காய்வின் போது பிரச்சினை வரும், அதற்காகவே மஹிந்தவின் பணத்தை எடுத்தேன்!

கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படுமென்ற காரணத்திற்காகவே பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் வங்கி கணக்கிலிருந்து தான் பணத்தை எடுத்ததாக உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து பெருந்தொகை பணம் மீள பெறப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியான பின், பிரதமரின் பாதுகாப்பு பிரதானி கேட்டபோதே உதித் லொக்குபண்டார இதை கூறியுள்ளார்.

கணக்காய்வு செய்யும்போது பிரச்சினை ஏற்படும் என்பதால், நான் அந்த பணத்தை மீளப்பெற்று தனியாக முதலீடு செய்தேன். ஒரு கோடியே 60 லட்சம் வரை அந்த முதலீட்டில் இருக்கும்.

மீதம் இருந்த சில மில்லியன் ரூபாய்கள் ஹோட்டல்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் சார்பில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு களியாட்டங்களுக்காக செலவிட்டேன் என உதித் லொக்குபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உதித் லொக்கு பண்டார அண்மையில் 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக கூறப்படுகிறது. உதித் லொக்கு பண்டார பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version