வீட்டுக்குள் துப்பாக்கி சூடு, கனடாவில் பயங்கரம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர்  கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் Richmond. Garden City, வீதிக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வீடு ஒன்றுக்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள்.

எனினும், உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரை  வெளியிடப்படவில்லை.

இது குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version