தீயில் எரிந்து தாயும் மகளும் பலி, கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுஇரவு 11.50 மணியலவில் தாயும், அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவஇடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயாரும், 17 வயதுடைய லக்சிகா எனும் அவரது மகளுமே உயிரிந்துள்ளனர்.

இச்சம்பவம் கொலையாக இருக்குமா எனும் கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version