இலங்கைமுல்லைத்தீவு

விபரீத முடிவெடுத்த முல்லைத்தீவு இளம் பெண்!

முல்லைத்தீவு, கேப்பாபிவு கிராமத்தில் 27 வயதுடைய பெண் ஒருவர் தவறானமுடிவு எடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

கேப்பாபிலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் முல்லைத்தீவில் தனியார் லீசிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

துரை றொபின்சா என்ற யுவதியே தவறான முடிவெடுத்து நேற்று நண்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனக்கு வாழ பிடிக்கவில்லைஎன மனவிரக்தியில் கடிதம் ஒன்றையும்  எழுதி உடமையில் வைத்துவிட்டு தற்கொலை செய்தமை பொலிஸாரின்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிசார் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button