இரு மோட்டார் குண்டுகள் திருகோணமலையில் மீட்பு!

திருகோணமலை சம்பூர் பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பூர், கட்டைபறிச்சான் அம்மன் நகர் பகுதியில் பற்றை காட்டுக்குள் வைத்தே குறித்த இரு மோட்டார் குண்டுகளும் இன்று (19) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

Exit mobile version