முதியவரின் சடலம் வயல் பகுதியில் மீட்பு! (Photos)

மட்டக்களப்பு, வவுண தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாங்கேணிசேனையில் வயல்வெளியில் இருந்து முதியவர் ஒருவர் சடலம் நேற்று மாலை (18) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்காடு, மாவடித்தீவு பிரதேசத்தை சேர்ந்த 4பிள்ளைகளின் தந்தையான 76 வயது உடைய தம்பியப்பா சுப்பிரமணியம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாடியமைத்து தனதுவயல், மாடுகளை நீண்ட காலமாக பராமரித்து வருவதோடு இடையிடையே வீட்டிற்கு வந்து செல்வதாகவும், சம்பவ தினமன்று உறவினர் ஒருவர் வயல்பகுதிக்கு சென்றபோது வாடி அருகே சடலமாக காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version