ஜனாதிபதி செயலாளராக பதவி ஏற்றார் காமினி செனரத்!

ஜனாதிபதியின் செயலாளராக காமினிசெனரத் இன்று புதன்கிழமை காலை பதவி ஏற்றுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக செயற்பட்டு வந்த கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தன்னுடைய பதவியினை இராஜிராமா செய்திருந்தார். இதனை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமனம் செய்யபட்டார்.

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வரும் அனுர திசாயநாக்க நாளை வியாழக்கிழமை பிரதமரது செயலாளராக பொறுபேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version