12 மணித்தியாலத்தில் 28 இலட்சம் வருமானமாம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கடந்த 15ம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

திறக்கப்பட்ட முதல் 12 மணி நேரத்தில் 28 இலட்சத்தி ஐயாயிரத்தி நூறு ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீரிகம தொடக்கம்  குருநாகல் வரையான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணி நேரத்தில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளது. எனினும் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version