கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு!

இந்தியா, கேரளத்தில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஆயர் பிரான்கோ முல்லக்கல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் முதல் கத்தோலிக்க ஆயரான பிரான்கோ முல்லக்கலின் மீது 2018ம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், ஆயர் தொடர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு அளித்தமை கேரளத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

பின், அந்தவழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், வலுவான சாட்சியங்கள் இல்லாததால் கோட்டயம் நீதிமன்று பிரான்கோ முல்லக்கலை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.

கேரளத்தை உலுக்கிய இவ்வழக்கில் பிரான்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பி உள்ளது.

Exit mobile version