பெண் ஊழியருக்கு முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக பணிபுரியும் பெண்  ஒருவர்மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதிக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஊழியர் கொக்காவில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே திரவம் ஒன்றினால் அவரி முகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் கண்ணில் பார்வை சீராகாததை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தூரபிரதேசங்களில் இருந்து காட்டுபகுதிகளை கடந்து வேலைக்கு வரும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version