கடற்கரையில் முழுதாக புதையுண்டு கிடந்த உழவு இயந்திரம்!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் சிலபாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த உழவு இயந்திரமானது இறுதி யுத்த காலத்தில் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில்புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற  போரின் இறுதி கட்டத்தில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இவற்றை பார்வையிட்ட பொலிசார் , நீதிமன்ற உத்தரவின் பின் தோண்டி பார்க்கப்படுமெனவும் தெரிவித்தனர்.

Exit mobile version