இலங்கை

நாட்டில் இன்றும் மின் தடை ஏற்படுமென மின்சாரசபை அறிவிப்பு!

நாட்டில் சிலபகுதிகளில் இன்றையதினம் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

நாளாந்த மின்சார தேவையினை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் மின்உற்பத்தி நிலைய அமைப்பின் செயல் இழப்புகள் காரணமாக இந்த மின்தடை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் மின் விநியோகம் நேற்றிரவு தடைப்பட்டது.

களனி திஸ்ஸ அனல் மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்விநியோகம் தடைப்பட்டதாகவும் எனினும் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்கு திரும்பியதாகவும் இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button