இலங்கைகிளிநொச்சி

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த இராணுவ சிப்பாய்!

முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

திருமுறுகண்டி, ஏ – 9 வீதியில் அமைந்துள்ள 11வது இயந்திர காலால் படைபிரிவில்  கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இராணுவ பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

தற்கொலை செய்த இராணுவ சிப்பாயின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button