இலங்கையாழ்ப்பாணம்

சர்வதேச பட்ட திருவிழா நிறுத்தப்பட்டது!

வருடா வருடம் தை பொங்கல் தினத்தில் வல்வெட்டித்துறையில் மாபெரும் பட்ட திருவிழா இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த வருடம் குறித்த பட்ட திருவிழாவினை சர்வதேச பட்ட திருவிழாவாக அறிவித்து இதற்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்குறித்த பட்டதிருவிழாவினை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலால் இம்முறை பட்ட திருவிழாவினை இடைநிறுத்துமாறு பல தரப்புக்களும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இதனை அடுத்து பட்டத் திருவிழா ஏற்பாட்டு குழுவிற்கும் பிரதேச மக்களுக்கும் இன்று மாலை கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் போது நாட்டின் தற்போதை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பட்டத்திருவிழா இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க வல்லை மண்ணில் இடம்பெறும் பட்டத்திருவிழாவிற்கு நாமல் ராஜபக்ச வருவதாக அறிவிக்கப்பட்டதற்கு பலரும் விசனங்களை வெளியிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button