இலங்கையாழ்ப்பாணம்

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை – கூவில் வீதியிலுள்ள வாடகை வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

பொலிஸ் உத்தியோகத்தரது குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தமது சொந்த இடமான மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்திரம் தனியாக வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவரது உயிரிழப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button