கடற்கரைக்கு நுழைவதற்கு தடை விதித்தது சென்னை மாநகராட்சி!

மீண்டும் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கடற்கரைகளில் நாளை தொடக்கம் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தற்போது புதிதாக பரவும் ஒமிக்ரோன் எனும் கொரோனாவின் புதிய திரிபு பரவல் காரணமாக  மறு உத்தரவு வரும் வரை கடற்கரை மணற்பரப்பில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் கடற்கரைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரத்தியோக நடைபாதையில் மாத்திரம் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version