லொட்டரியில் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்!

மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு தனது குடும்ப கடனை அடைப்பதற்காக சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்தவர் தினகர். கடந்த இரு  ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்ற இவர் அங்கு கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

டிசம்பர் 25-ஆம் தேதி, ஒன்லைன் மூலம் அதிஷ்ட இலாப சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார்.

இதனை அடுத்து புத்தாண்டை தொடர்ந்து நடைபெற்ற குலுக்கலில், அவர் வாங்கிய லொட்டரி ரிக்கேட்டில் இருந்த இலக்கம் விழவே, அவருக்கு 10 மில்லியன் திர்ஹாம் (இலங்கை மதிப்பில் 55கோடியே 24 இலட்சத்தி 68ஆயிரத்தி 260ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

எனக்கு லொட்டரி மூலம் கிடைத்த பணத்தினை வைத்து எனது குடும்பத்தினை காப்பாற்ற முடியும். அத்தோடு எனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளேன். மற்றும் எனது கிராம பாடசாலைக்கு உதவி செய்வதற்கு உள்ளதாகவும் தினகர் தெரிவித்தார்.

Exit mobile version