வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் ஆண்டிலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசு வேலைகளுக்கு புதிதாக எவரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் வைத்து பண்ணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பசில் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

மீன்பிடித்துறை மற்றும் கால்நடைகள் கூட தேவையான அளவு புரதச்சத்து மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பால்மா இறக்குமதி செய்வதை நிறுத்த முடிந்தால் பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version