அமைச்சர் டக்ளஸை கண்டித்து பிரதேச சபையில் தீர்மானம்!

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரி என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தினை கண்டித்தும், இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீளப்பெற வேண்டும் என தெரிவித்தும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 35 உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (08) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 46ஆது அமர்வு நடைபெற்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கறுப்புக்கொடியினை எந்தி ஏகமனதாக இந்த தீர்மானத்தினை எடுத்ததாக கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.

Exit mobile version