வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் உள்ளவர்களுக்கு சட்டத்திற்கு விரேதமான முறையில் பணம் அனுப்பப்படும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டத்திற்கு விரோதமான முறையில் நாட்டிற்கு பணத்தினை அனுப்ப வேண்டாம் எனவும் உரிய முறையில் நாட்டிற்கு பணத்தினை அனுப்புமாறும் கூறியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பணத்தினை அனுப்பும் கணக்குகளுக்கு தடை விதிப்பதற்கான அதிகாரம் மத்திய வங்கியிடம் காணப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற போதும் கூட இவ்வாறான கணக்குகள் தடை செய்யப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே உரிய முறையில் பணத்தினை அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version