ஹெலிகப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி பலி!

தமிழகத்தின் தமிழகத்தின் குன்னூரில் இன்று இடம்பெற்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளினதும் தலைமை தளபதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய விமானப்படை தெரிவிக்கையில்,

இன்று தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவதேயும் அவரின் மனைவியும் உட்பட மொத்தமாக 13பேர் பலியாகியுள்ளனர்.

அத்தோடு இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருன் சிங்கிற்கு  வெல்லிங்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version