13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

தந்தையால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி செல்ல முற்பட்ட போது தந்தையினை காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர்.

இதில் பாதிப்புக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனது 13 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தந்தை இரவோடு இரவாக கொழும்பிற்கு தப்பி செல்ல முற்பட்ட போது காத்தான்குடி பேருந்து நிலையத்தில் வைத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயது உடையவர் எனவும் அவரது மனைவி மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிபவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version