இலங்கைஉலகம்

இலங்கையர் எரித்து கொலை, பாகிஸ்தானில் 100 பேர் கைது!

பாக்கிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 100ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம்  தெரிவித்த்துள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தினையும் அவமானத்தினையும் தெரிவிப்பதற்காக இலங்கை ஜனாதிபதியுடன் பேசியதாகவும் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் சற்று முன் வெளியிட்ட ட்விட்டர் பதிவிலேயே இந்த விடயத்தினை குறிப்பிடப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டத்தின் முழு  தீவிரத்துடன் வழக்கு தொடரப்படுமெனவும் பாக்கிஸ்தான் பிரதமரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button