இலங்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

நாளை தொடக்கம் மீளவும் எரிவாயு சிலிண்டர்களை விநியோக செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நிபந்தனைகளின் கீழ் சிலிண்டர்கள் மீள விநியோகம் செய்யப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் கடந்த பல நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் பல்வேறுபட்ட வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இருந்தது. இதனைஅடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது.

இந்நிலையில், நாடு முழுதும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதை  இடை நிறுத்தி உள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளால் நாட்டில் பல தொழில் துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததோடு, உணவக உரிமையாளர்களும் கடும் சிக்கல் நிலையை எதிர்நோக்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button