யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி திடீரென உயிரிழப்பு!

வடமராட்சியில் நவிண்டில் நாச்சிமார் கோவில் பகுதியில் 17 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி திடீரென சுகவீனமுற்ற நிலையில் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதுடைய கோடிஸ்வரன் வினுசியா என்பவராவார்.

தற்பொழுது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version