இலங்கை

சிலிண்டர் வெடிப்புகள் சாதாரணமானவை – பெரிதாக அச்சப்படத் தேவையில்லை!

நாட்டில் இப்பொழுது எரிவாயு சிலிண்டர்கள் வடிக்கும் சம்பவங்கள் குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எதிர்காலத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும்.

ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு வருடத்தில் கணக்கிட்டு பாருங்கள் எத்தனை சம்பவங்கள் இவ்வாறு நடந்திருக்கின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button