இலங்கை

6 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை!

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கரோனா வைரஸ் கிருமி காரணமாக சில நாடுகளில் இருந்து இலங்கை வருகின்ற பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

அதன் பிரகாரம் தென் ஆபிரிக்கா, பொத்ஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் எஸ்வடினி ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற 17 நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 14 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கும் இத்தடை விதிக்கப்படவுள்ளதோடு, குறித்த நாடுகளில் இருந்து கடந்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தார்கள் இருந்தாள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுமாறும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button