ஊடகவியலாளர்கள் மீது ராணுவத்தினர் கொடூரத் தாக்குதல்!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதை அடுத்து அறிக்கை இடுவதற்காக சென்ற இரு ஊடகவியலாளர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்ததோடு அச்சுறுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருக்கும் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் எஸ் எஸ் சந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை அறிந்து குறித்த பகுதிக்கு அறிக்கை இடுவதற்காக சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இவ்விடயத்தினை அறிக்கையிட வேண்டாம் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முற்பட்டதோடு அச்சுறுத்தியும் உள்ளனர்.

தற்போது குறித்த இரு ஊடகவியலாளர்களுக்கும் புலனாய்வாளர்கள் ஒவ்வொரு இலக்கங்களை வைத்திருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

Exit mobile version