செவிலியர் ஒருவரை பணியமர்த்த உதவினால் 12,000 டொலர் பரிசு!

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், அங்கே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, செவிலியர்கள் பணி அமர்த்த உதவி செய்பவர்களுக்கு ரொக்க பரிசு தருவதாக அறிவித்தல் விடுத்துள்ளது.

செவியர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று தேர்ந்த செவிலியர் ஒருவரை தமது மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்து விட்டால், சேர்த்து விடும் நபருக்கு 12,000 சிங்கப்பூர் டொலர் ரொக்க பரிசாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிறைய செவிலியர்கள் சிங்கப்பூர் வந்து பணிபுரிவது வழக்கம்.

ஆனால், சிங்கப்பூரில் செவிலியர்களிற்கு நிரந்த குடியுரிமை வழங்கப்படுவதில்லை. எனவே அவர்கள் இங்கு 2 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.

இதனால் 2020ம் ஆண்டு சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இப்பொழுது அது இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கபடுகிறது. இந்த 2021ம் ஆண்டு முதல் 6 மாதத்தில் மாத்திரம் 1500 செவிலியர் இராஜினாமா செய்துள்ளனர்.

அதேபோல வெளிநாட்டினை சேர்ந்த 500 மருத்துவர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

ஆண்டுக்கு 2000 செவிலியர் ராஜினாமா என இருந்தது, இப்போது இது ஆண்டிற்கு 3000ஐ கடந்துள்ளதால் சுகாதாரதுறை கவலையில் ஆழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version