“கொல்பவன் வெல்வான்” எனும் புலிகளின் குண்டு யாழில் மீட்பு!

விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதி சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் நேற்று குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகி உள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

Exit mobile version