யாழ்ப்பாண பொலிசாரால் அருண் சித்தார்த் கைது!

அருண் சித்தார்த் எனும் இளம் குடும்பஸ்தர் நேற்றைய தினம் (20) யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நீண்டகாலமாக தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்தால், அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த பிடியாணையின் அடிப்படையில், நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் சென்றுள்ளனர்.

இதன்போது, அவரின் தற்போதைய மனைவி பொலிசாருடன் முரண்பட்ட நிலையில் அருண் சித்தார்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அருண் சித்தார்த் இராணுவ பின்னணியில் இயங்கி வருவதாக நீண்டகாலமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

அத்தோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version