வைத்தியசாலையின் பிண அறைக்குள் சடலங்களை உண்ணும் உயிரினங்கள்!

மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிண அறைக்குள் நாக பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பன நுழைந்து பிணங்களை உண்பதாக தெரியவருகிறது.

இதனால் பிண அறையில் பணிபுரியும் ஊழியர்களும் இறந்தவர்களது உறவினர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில தினங்களிற்கு முன்னர் கூட பிண அறையில் வைக்கப்பட்ட சடலங்களில் காது, மூக்கு ஆகிய உறுப்புகளை எலிகள், பாறை உடும்புகள் உட்பட விலங்குகள் கடித்து உண்டுள்ளதாக இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் மலர்சாலை ஊழியர்கள் தெரிவிக்கித்தனர்.

பிண அறையின் இரும்பு கதவு சேதமடைந்துள்ளமையால் இந்த சம்பவம் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பல முறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் தற்போதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Exit mobile version