போர் வெற்றியை நினைவு கூறும் தூபி ஜனாதிபதியால் திறப்பு!

போர் வெற்றிகளை நினைவுகூறும் விதத்தில் அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தாது எனும் கோபுரம் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவால் திறக்கப்பட்டது.

போர் வெற்றிகளை நினைவுகூருவதற்கான நினைவிடங்களை நிர்மாணிக்க கூடாது என பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும் நினைவு தூபியாகவே நியமிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே நான் இதற்கு எதிர்ப்பினை தெரிவித்தேன்.

இப்படியான நினைவிடங்களை நிர்மாணிப்பதன் ஊடாக தோல்வியடைந்த தமிழ் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும். அப்படியான மனநிலை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளகூடாது.

போரில் வெற்றி அடைந்தவர்கள் திருப்தியும் பெருமையும் அடைவார்கள். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரம் அடைவார்கள். இதனை சாந்தப்படுத்த முடியாது. பௌத்த சமயம் யுத்தங்களை அங்கீகரிப்பதில்லை.

சந்தஹிரு சேய தாது கோபுரம் தோல்வியடைந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் தீ.

இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், சில இராணுவத்தினர் மட்டுமே மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் சிறி சுமணதேரர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version