கொரோனாவால் மரணிக்க உள்ளவரை காப்பாற்றும் மாத்திரை 1 இலட்சமாம்!

அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனமானது கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக பேக்ஸ்லோவிட் (Paxlovid) எனும் மாத்திரையினை உருவாக்கியுள்ளது.

‘பேக்ஸ்லோவிட்’ எனும் இம்மாத்திரையானது, வைத்தியசாலைகளில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத்திரையினது விலை இலங்கையில் மதிப்பில் சுமார் ஒரு இலட்சத்தி ஏழு ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு 1 கோடி கொரோனா மாத்திரைகளை 530 கோடி  அமெரிக்கன் டொலருக்கு விற்பனை செய்ய உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version