இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பிக்கு கவலைக்கிடம்!

கந்தளாய் பகுதியில் நடைபெற்ற விபத்தில் 4 பிக்குகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (17) புதன்கிழமை மாலை கந்தளாய் – கண்டி வீதியின் 87ம் மைல் கல்லில் நடைபெற்றுள்ளது.

ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், சேருவில விகாரையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சேருவில விகாரையில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பிக்குகள் திரும்பி கொண்டிருந்த போதே ஏற்பட்டதாகவும் விபத்தின் போது 10 பிக்குகள் உட்பட 19 பேர் வானில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version