இந்தியா

இந்திய இராணுவ தளபதி இஸ்ரேலுக்கு பயணம்!

இந்திய இராணுவத் தளபதி முகுந்த் நரவானே ஐந்து நாள்கள் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றுள் ளார். இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமென இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.

செயற்கை நுண்ண றி வு , ரோபோட்டிக்ஸ் போன்ற அ தி ந வீ ன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களை யு ம் உ ரு வாக் கு வ து தொடர்பிலும் இந்த பயணத்தில் பேசப்படும் என செய்தி கள் தெரிவிக்கின்றன.

இ ந் தி ய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார் ஆகியோரும் அண்மையில் இஸ்ரேலுக்குச் சென்று வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படைத் த ள ப தி யாக இ ரு ந் த ஆர்.கே.எஸ். பதூரியாவும் கடந்த ஓகஸ்டில் இஸ்ரேல் சென்றிருந்தார்.

சீனாவுடன் எல்லை யில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ள சூழலிலும் இந்திய முக்கிய பிரமுகர்க ளின் அடுத்தடுத்த இஸ்ரேல் பயண ங்கள் மிகுந்த முக் கியத்துவம் பெற்றுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button