சனிக்கிழமைகளிலும் வகுப்பு, தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாகக் கொண்டு வந்தது. இதன்படி பாடசா லைகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.

முதல் கட்டமாக 9ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாள்களை ஈடுகட்ட அ டு த் து வ ரு ம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பாடசாலைகள் செயல்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாடசாலைகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version