தந்தையை கம்பியால் அடித்து கொலை செய்த மகன்!

தனது தந்தையினை மகன் ஒருவர் இரும்புகம்பியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் குருநாகல், பனாகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்றுள்ளது.

இதில் பனாகமுவ, கோபாலகெதர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இச் சம்பவத்துக்கு காரணம் எனவும் மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய நபரை கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Exit mobile version