இலங்கை

அரசிற்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம்!

இந்திய விவசாயிகள் கொரோனாவிற்கு மத்தியில் தலைநகர் டெல்லியை சுற்றி வளைத்ததை போல நாம் கொழும்பை சுற்றிவளைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று கொழும்பு – ஹைட்பார்க் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

விவசாயத்திற்கும் பாடசாலை கல்வி மற்றும் பொருளாதாரதிற்கும் தற்போதைய அரசு ஏற்படுத்தி வரும் அழிவினை தடுப்பதற்காகவும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் இப்போராட்டமானது திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

அத்தோடு, எத்தடை வரினும் இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை எனவும், இப்போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்று அரசிற்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  கேட்டு கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button