புதுக்குடியிருப்பில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளை!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு இரணைப் பாலை 5ஆம் வட்டாரப் பகுதியில் 8பேர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்பின் விட்டில் இருந்த பெறுமதியான வாய்ந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கடந்த வியாழன் இரவு 8 பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளதுடன், நால்வர் வீட்டின் வெளியே நிற்க மீதமுள்ள நால்வர் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த வயோதிப தாய் (வயது – 50) மீது தாக்குதலினை நடத்தி உள்ளனர்.

இதில் குறித்த தாயார் காயமடைந்து புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே வேளை 21 வயது இளைஞர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டு அங்கிருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Exit mobile version