சென்னையில் தொடரும் வெள்ளம்: படகு மூலம் வேலைக்கு செல்லும் அவலம்!

சென்னையில், கடந்த 5 நாட்களாகியும் வடியாத வெள்ள நீரால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரு கிறார்கள். வேலைக்கு செல் வோர் படகுகள் மூலமே சென்று வரும் நிலை உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட் டன. 5 நாள்களாக பெய்யும் மழை சென்னை வாசிகளை பெரிதும் பாதித்திருக்கிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர், வீடுகளுக்குள்ளும் எட்டிப் பார்த்துள்ளது. இத னால் குடி யிருப்புகள் மழை நீரில் சூழப் பட்டுள்ளன.

நீர் நிலைகள் அருகேயுள்ள குடியிருப்புகளும் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் மழைநீரில் மூழ்கி கிடக்கும் வீதிகளால் போக்குவரத்து தடைபட்டிருக் கிறது.

வேளச்சேரி, நுங்கம்பாக் கம், திருவொற்றியூர், எண் ணூர், காசிமேடு, தண்டையார் பேட்டை, கே.கே.நகர், விருகம் பாக்கம், சைதாப்பேட்டை, கொளத்தூர், கொரட்டூர், மந்தைவெளி, அசோக்நகர், சூளை, பட்டாளம், பெரவளர் என நகரின் பல பகுதி களில் பெரும்பாலானோரின் வீடுகளில் மழைநீர் புகுந்திருக்கி றது.

கனமழை தொடர்வதால் 3 வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள் ளன.

புதுடில்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங் களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்க;ர் அல் லது ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன.

Exit mobile version