இலங்கையாழ்ப்பாணம்

யாழ் பஸ் நிலையத்தில் நின்ற 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! இருவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் தனியாக நின்ற 15 வயதான சிறுமியினை துஷ்பிரயோகம் செய்ததாக இரு இளைஞர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தொிய வருவதாவது,

பருத்தித்துறை பஸ் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் தனியாக நின்ற 15 வயதுடைய சிறுமியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர்.

இதன் போது குறித்த சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தினை அடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று முந்தினம் இரவு அழைத்து செல்லப்பட்ட சிறுமி, இரு வேறு வேறான நேரங்களில் இரு  இளைஞர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தபட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 19 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவர்  பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button