27 வயது ஆசிரியை திடீர் மரணம்!

ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட  27வயதுடைய ஆசிரியை ஒருவர் திடீர்ரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தெனியாய − கொட்டப்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த ஆசிரியை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன, இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 27 வயதுடைய குறித்த ஆசிரியைக்கு, 13 வயதிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகயீனம் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறிய போதிலும், இவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே, அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version