இலங்கையில் இராணுவ தளம் அமைக்கிறது சீனா! அறிவித்தது பென்ரகன்!

சீனாவின் இராணுவ தளம் ஒன்றினை இலங்கையில் அமைப்பது தொடர்பில் சீனா பரிசீலனை செய்து வருகிறது என அமெரிக்காவின் படைத் தலைமையகமான பென்ரகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி எனும் தலைப்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இராணுவ பலத்தை பரந்த பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

சீனா இராணுவ தளங்களையும், இராணுவத்துக்கு வசதி வழங்கும் நிலையங்களையும் இலங்கை உட்பட 13 நாடுகளில் நிறுவ இடமுள்ளது.

இலங்கை தவிர கம்போடியா, சிங்கப் பூர், மியன்மார், தாய்லாந்து இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலேயே சீனா இந்தத் தளங்களை நிறுவவுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version