இலங்கை

இன்று ஹோட்டலில் நடந்த வெடிப்பு சம்பவம்! மூவர் காயம், ஐந்து வீடு பாரிய சேதம்!

இன்று காலை வெலிகம, அவரிவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் உணவகம் மற்றும் அருகே உள்ள ஐந்து வீடுகளிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹோட்டலின் சமையல் அறையில் இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் ஹோட்டல் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயல் வீட்டு பெண் ஆகியோர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இவர்களுக்கு பாரிய ஆபத்து இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தி உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button