இலங்கை

வடக்கில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – ஆளுநர் அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார்.

இது குறித்த அறிவுறுத்தலை ஆளுநரால் வட மாகாண கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை நாளாகும்.

அதனால் வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டதற்கு பதில் பாடசாலை எதிர்வரும் நவம்பர் 13ம் திகதியான சனிக்கிழமை அன்று இடம்பெறும் எனவும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button