ஜனாதிபதி தேர்தலில் மீளவும் களமிறங்கும் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங் கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள் ளார்.

விவசாயிகளுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ள அவலநிலை எதிர்காலத்தில் அமையவுள்ள தனது அரசின் கீழ் மீளவும் ஏற்பட இடம் அளிக்க மாட்டேன் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்தித்த பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதை தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

அத்தோடு உலகில் எந்தவொரு நாடும் 100% இயற்கை விவசாயத்தினை  பின்பற்றவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் கூட, 50% விவசாயமே இயற்கை முறைமையை அடிப்படையாகக் கொண்டது எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

Exit mobile version