இலங்கை

ஞானசாரரை எனக்கு ஆலோசனை வழங்கவே தெரிவு செய்தேன்!

“ஒரே நாடு, ஒரே சட்டம்” எனும் வரைபை உருவாக்கும்  தலைமை பதவி ஞானசார தேரருக்கு  வழங்கப்பட்டமை ஆனது எனக்கு ஆலோசனை வழங்கவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்க அல்ல என கோட்டாபய தெரிவித்துள்ளார்.

அரசில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களது சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

நான் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் கட்சி தலைவர்களிடம் ஆலோசனை பெறச் சென்றால், எனக்கு தேவையான நண்பர்களைத் தெரிவு செய்யவும்  அவர்களிடமே அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்றியை தெரிவு செய்த போதும் கூட இந்தமாதிரியான எதிர்ப்புகள் வந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button