நாட்டில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்றினை அடுத்து சுமார் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்ட மாகாண பயணிகள் புகையிரத சேவை திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம் ஆகவுள்ளது.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக அனைவரும்  புகையிரத சேவையை  பயன்படுத்த முடியும்.

திங்கட்கிழமை தொடக்கம் பயணச்சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அலுவலக புகையிரத சேவைக்காக திங்கட்கிழமை முதல் பிரதான புகையிரத பாதையில் 50 புகையிரத பயணங்களும், கரையோர புகையிரத பாதையில் 66 புகையிரத பயணங்களும், களனி வழி பாதையில் 17 புகையிரத பயணங்களும், புத்தளம் வழி பாதையில் 16புகையிரத பயணங்களும், வடக்கு புகையிரத பாதையில் 3 புகையிரத பயணங்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.